திங்கள், 16 பிப்ரவரி, 2015

தீவிரவாதம் : இஸ்லாமும் முஸ்லிம்களும்

கெண்டகனில் நடந்த இருநாள் கருத்தரங்கம்

தேதி: 19-August-1980

கெமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அமைந்த கெண்டகனில் அரை எண் 123 - ல் கேமெரிக்க , கிஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்கள் தலைமையில் ஊடக / மீடியாக்கள்,  உளவு பிரிவுகள் கலந்து கொண்ட இரு நாள் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. மிகவும் சொற்ப / தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் புதிய வரவாக னேட்டோ நாடுகளின் தலைவரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன முக்கியமாக பெருகி வரும் இஸ்லாமிய எழுச்சி குறித்து அச்சமும், கவலையும் பகிரப்பட்டது. இதனிடையே இஸ்லாமிய வளர்ச்சியை மட்டுபடுதுவது / கட்டுப்படுத்துவது சம்பந்தமான காரசாரமான விவாதங்கள் நடந்தது. முடிவில் "தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம்" என்ற அடிப்படையின் கீழ் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளை முன்னேடுப்பதாவும் அதற்க்கு முகாந்திரமான நடவடிக்கைகளை மீடியாவின் மூலமும், உளவு அமைப்பின் ஒரு சில அரசியல், மத ரீதியான கொலைகளின் மூலம் முன்னெடுப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.  எனவே கீழ்க்கண்ட விஷயங்களில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உறுப்பு நாடுகளிடையே ஏகோபித்த ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ரகசிய சுற்றுக்கு விடப்பட்டது.

தீர்மானத்தின் சாரம்:

தீவிரவாத குற்றச்சாட்டு மூலம்:
1. இஸ்லாத்தை / முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துவது.
2. தீவிரவாத செயல்களை செய்து முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் நாடுகள் மீதும் பழிபோடுவது.
3. தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி முஸ்லிம் நாடுகள் மீது படையெடுத்து அதனை கட்டுபடுத்துவது (தூதரகங்கள் மற்றும் வேற்று நாட்டினரின் மக்கள், தொழிற்சாலைகளில் தாக்குதலை மேற்கொண்டு முஸ்லிம்கள் மீது பழி போடுதல்).
4. தீவிரவாத செயல்களை செய்ய இஸ்லாத்தில் ஆர்வமில்லாத முஸ்லிம்களை தேர்ந்தெடுப்பது.
5. தீவிர இஸ்லாமிய செயற்பாட்டாளர்களை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்து சமூகத்திலிருந்து  அவர்களை தனிமைப்படுத்துவது.
6. முஸ்லிம்களை கோபமூட்டும் படியான செய்திகளை, செயல்களை செய்து அவர்களை வன்முறை செயல்களில் ஈடுபட வைத்து பிற சமூக மக்களிடையே வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், பிரிவினை வாதிகள், சகிப்புத்தன்மையற்றவர்கள்  என பிற சமூக மக்களிடையே எண்ணங்கள் ஏற்பட வகுத்தல்.

ஊடகங்களின் மூலம்:
1. உலக மீடியாவினை ஒருங்கிணைத்து செய்திகளை பகிர்தல்.
2. மீடியாவில் முஸ்லிம்களுக்கெதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் முடிந்தவரை இஸ்லாம் / முஸ்லிகளுக்கு ஆதரவான செய்திகளை மட்டுப்படுத்துவது.
3. குற்றச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களின் குற்றச் செயற்பாட்டினை கூடுமான அளவு செய்திகளுடன் தருவது, இதன் மூலம் மற்ற சமுக மக்களுடைய வெறுப்பினை அடைய வைத்தல்.

கொள்கைகளில் குழப்பம் செய்வதின் மூலம்:
1. முஸ்லிகளிடையே மார்க்க ரீதியில் பிளவுபட உரியவர்களை இனங்கண்டு பயிற்றுவித்து இயக்கங்களை ஏற்படுத்தி கருத்து முரண்பாடு மற்றும் மோதல்கள் ஏற்பட வழிவகுத்தல்.
2. இஸ்லாமில் வேறுபாடு உள்ள பிரிவுகள் மற்றும் காதியானி, ஷியா, இஷ்மாயிலிய்யா போன்ற கொள்கை முரண்பாடு உடையவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அணைத்து செயல்பாடுகளுக்கும் ஆதரவு மற்றும் ஊக்கமளிப்பது.

உளவு அமைப்புக்களின் மூலம்:
1. நாடுகளில்  ரகசிய சிறைச்சாலைகளை ஏற்படுத்தி இஸ்லாத்தில் தீவிரமாக செயல்படுபவர்களை கடத்தி வந்து அவர்களுடைய செயல்களை மட்டுபடுதுதல் மற்றும் அங்ககீனப்படுதுதல்.
2. ரகசிய உளவு அமைப்புகளின் மூலம் மற்ற நாடுகளின் உளவு அமைப்புகளோடு தொடர்பு கொண்டு இஸ்லாமிய செயற்பாட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது தேவையேற்படின் உளவு அமைப்புகளின் மூலம் அவர்களை ஒழித்துக்கட்டுவது
3. இஸ்லாமிய இயக்கங்களில் ஒற்றர்களை ஊடுருவ வைப்பதின் மூலம் அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் பிரிவுகள் / பிளவுகள் ஏற்படுத்தல், நீர்த்து போக செய்தல்.
4. முஸ்லிம்களிடையே ஆயுதக்குழுக்களை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிம் நாடுகளில் பிரச்சினை ஏற்படுத்த வழிவகுத்தல்.

தீர்மான சுற்று கிடைக்கப்பெற்றோர்:
1. கேமெரிக்க அதிபதி.
2. கேமெரிக்க வெளியுறவு கொள்கை வகுப்பாளர்.
3. கேமெரிக்க உளவு அமைப்பு
4. கிஸ்ரேலிய அதிபர் மற்றும் கேசாத் உளவு அமைப்பு
5.  நட்பு நாடுகளின் உளவு அமைப்புக்கள் (M5,ரா,கேஜிபி)
6. ராய்ட்டர், எ.எப்.பி, மற்றும் ஸ்டார்  செய்தி நிறுவனம்.
7. ப்ரீமேசன் அமைப்பு

குறிப்பு:  இது கற்பனையாக எழுதப்பட்ட ஒன்றே. ஆனால் இஸ்லாமை தீவிரவாதத்தோடு முடிச்சி போட்டு இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க இப்படி ஒரு  ஏற்பாடு நடந்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று.

-- முகவைதம்பி