புதன், 28 ஜனவரி, 2015

பாகிஸ்தான் : தோல்வியடைந்த நாடா?


பாகிஸ்தானை, பாகிஸ்தானிகளை பற்றி செய்தித்தாள்களில் ஒவ்வொரு நாளும் கெட்டதாகவே வருகிறது. நல்லதாக எதாவது செய்தி வருவதென்பது ஆச்சரியம் தான். எனக்கென்னவோ சில சமயங்களில் இதை சதி செயலாகவோ, மீடியாவின் தீவிரவாதமாகவோ தான் பார்க்கிறேன். செய்திகளில் உண்மை இருக்கலாம் ஆனால் மிகைப்படுத்தப் படுகிறதோ என எண்ணத்தான் தூண்டுகிறது. இந்தியாவினுடைய மற்றும் இஸ்ரேல் அமெரிக்க உளவு அமைப்புக்கள் 'பாகிஸ்தான் ஒரு மூட முல்லாக்கள் மற்றும் கிரிமினல்கள் நிறைந்த நாடு' என்பதை நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இந்திய நாட்டு மக்கள் மத்தியில் விதைப்பதில் தீவிர ஆர்வம் உடையது போலவே தெரிகிறது.

பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவிலிருந்து பிரிந்த சமயத்தில் எங்களை போன்றவர்கள் இது இஸ்லாமிய வழியில் ஆட்சி செய்து அது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் பாகிஸ்தானை தற்பொழுது பார்க்கும் போல் அது  இனவாதத்துக்கு தானே தவிர இஸ்லாத்திற்காக பிரிந்தது அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியாவில் ஏதாவது ஒரு பயங்கரவாத தீவிரவாத ஏன் பிளாக் நோய் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டாலும் அதை குறிப்பாக பாகிஸ்தானுடன் / பங்களாதேஷுடன் தொடர்பு படுத்தி செய்தி வருவதில் இந்திய மீடியாக்களுக்கும், அரசுக்கும், இந்துத்துவாவினருக்கும் அலாதி பிரியம்.  ஏன் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு எதிராக ஏதும் சதிச்செயல் நடைபெறுவதில்லையோ? நடந்தாலும் அது ஒரு இந்து  தேசம். அதனால் இந்திய ஆளும் வர்க்கம் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.ஆனால் பாகிஸ்தானோ அல்லது பங்களாதேஷோ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக கொண்ட நாடுகள் அதனாலேயே மீடியாக்கள் அரசாங்க ஆதரவோடு அச்செய்திகளை பெரிதாக்குகின்றன என நினைக்கின்றேன்.
இதனுள்ளே மேலும் பல செய்திகள் அடங்கியுள்ளன. என்னவென்றால் இந்திய நாட்டில் வாழக்கூடிய பெரும்பான்மையான மக்கள் இந்து என்ற நிலையில் ஐக்கியபடுதப்பட்டாலும் அவர்களுக்குள்ளே நிற, இன வர்க்க பேதங்கள் தலை தூக்கி உள்ளன. இது இந்து மதத்தினுடைய பெரும் பிரச்சினை. இதை சரி செய்யவே முடியாது. ஏனென்றால் இந்து மதத்தின் கொள்கைகளும் மற்றும் பார்ப்பனீய / பணீயா சாதிகளுடைய கடுமையான போக்குகளாலும் இதை தடுக்க முடியாது. இந்த நிலையில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் மூதாதையர் மூலம் இம்மதத்தை தங்கள் சமயமாக எடுத்துக் கொண்டாலும் இதிலிருந்து வெளிவர முயன்றாலும் பல்வேறு காரணிகளால் அது தடைக்கல்லாகவே இருக்கின்றன. உதாரணமாக இந்து மதத்திலிருந்து வெளியேறி  மாற்றுப் பாதையில் பயணிக்கலாம் என மக்கள் நினைத்து அதற்கு வடிகால் தேடும்போது அதற்கு இஸ்லாம் சிறந்ததாக தோன்றினாலும் பொதுவாக தீவிரவாதம் அதிலும் பாகிஸ்தானிய பயங்கரவாதம் (?) போன்றவை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால் அந்த எண்ணத்தை கைவிடுகின்றனர். எனவே இம்மாதிரியான எண்ணங்கள் மக்களின் மனதில் ஏற்படவேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காகவே இது மாதிரியான நேர்மறையான செய்திகள் வருகிரதோ என எண்ணத் தோன்றுகிறது.

அதே சமயம் அவர்களும் ஒரு சிறந்தவர்களாக முன்மாதிரி முஸ்லிம்களாக நடக்கவில்லை. பொதுவாக எல்லா நாட்டு மக்களிலும் நல்லவர்களும் உண்டு தீயவர்களும் உண்டு. பாகிஸ்தானை பார்த்தோமென்றால் உலக அளவில் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கலாகவே காண்கிறோம். போதை பொருட்கள் கடத்தல், பாலியல் பிரச்சினையில், திருடு கொள்ளையடித்தலில் கொலை செய்வதில் அவர்கள் மிக அதிகமாக ஈடுபடுகிறார்கள்.

கிட்டதட்ட 16 வருடம் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருபவன் என்ற முறையில் அதிகளவு அவர்கள் செய்யும் குற்றங்களை பத்திரிக்கைகள் மூலமும், நண்பர்கள் மூலமும் நேரிடையான ஒரு சில சம்பவங்கள் மூலமும் கேட்டும் பார்த்தும் வருகிறேன். முன்பு அரபு அமீரக ஷார்ஜாவில் பணிபுரிகையில் பல கொள்ளை கொலை சம்பவங்களில் அவர்களின் பங்கு மிக அதிகமாக இருந்ததை கண்டேன். அச்சமயத்தில் பத்திரிக்கையில் பாகிஸ்தானி ஒருவன் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது.  அது சம்பந்தமாக போலிசின் தொடர்ச்சியான விசாரணையில் அவனுடன் தங்கியிருந்த சக பாகிஸ்தானி நாட்டவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஓரினச் சேர்க்கை விசயமாக அவன் கொல்லப்பட்டதாக வாக்கு மூலம் கொடுத்தனர். இதைபோன்றே எத்தனையோ பாலியல் ரீதியான குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள்,

அதுபோல போதை பொருட்கள் கடத்தலில் பங்கு பெறுபவர்கள் அதிகம் அவர்களே. சென்ற ஆண்டும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் போதை பொருட்கள் கடத்தலுக்காக சவுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட நாட்டவர்களில் அதிகம் பாகிஸ்தானிகளே.

அதுபோல ஊழல் செய்வதிலும் அந்த நாடு முதல் 25 நாடுகளுக்குள்.
இன்னும் தற்கொலைப் படை / வெடிகுண்டு நிரப்பிய வாகனங்களை கொண்டு மக்கள் நடமாட்டம் நிரம்பிய இடங்களில் வெடிக்க செய்தல், ஷியா - சுன்னா பிரச்சினைகள், இப்படி பிரச்சினைகள் நிரம்ப உள்ள பூமியாக பாகிஸ்தான் காட்சி அளிக்கிறது. இது இந்திய ரா உளவு அமைப்பினுடைய வேலையாக இருக்கலாம். பாகிஸ்தான் காஷ்மீர் விசயத்தில் விடாப்பிடியாக இருப்பதால் இந்திய அரசு பாகிஸ்தானை நிலை குலைய வைக்க இஸ்ரேல் மொசாத்+ரா உதவியோடு அப்பப்ப அங்கு இது போல குண்டு வெடிப்புகள் செய்து வருவதாகவும் இருக்கலாம். இப்படி பாகிஸ்தானில் எது நடந்தாலும் இங்குள்ள இந்துத்துவாவினர் இச்செயல்களை  இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை ஒரு அச்சத்துடனே  வைத்திருக்கின்றனர்.

எனவே இது போன்ற விஷயங்களால் எப்படி பார்த்தாலும் பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த ஒரு நாடாகவே தோன்றுகிறது.

-- முகவைதம்பி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக